search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக மந்திரி"

    பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பெண் மந்திரியின் இடுப்பை திரிபுரா மந்திரி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. #TripuraMinister #ManojKanti
    அகர்தலா:

    திரிபுரா மாநிலத்தில் முதல்-மந்திரி பிப்லாப் குமார் தேப் தலைமையில் பாரதிய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது.

    சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி அந்த மாநிலத்திற்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்று இருந்தார்.

    அப்போது சில நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த விழாவில் பா.ஜனதா மந்திரிகள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திட்டத்தை தொடங்கி வைத்த போது திரிபுரா மந்திரிகள் மேடையின் இருபக்கமும் அணிவகுத்து நின்றார்கள். அப்போது ஒரு பக்கத்தில் நின்று கொண்டிருந்த சமூக நலத்துறை பெண் மந்திரி சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி அமைச்சர் மனோஜ்காந்தி என்பவர் நின்று கொண்டு இருந்தார்.



    பெண் மந்திரியின் இடுப்பை மனோஜ்காந்தி பிடித்தப்படி நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து பெண் மந்திரிக்கு விழா மேடையிலேயே பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதையடுத்து மந்திரி மனோஜ்காந்திக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. ஆனால் அதை ஏற்க முதல்-மந்திரி பிப்லாப் குமார் மறுத்து விட்டார்.

    இதற்கிடையே மந்திரி மனோஜ்காந்தி ராஜினாமா செய்யாவிட்டால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக மூத்த தலைவர்களில் ஒருவரான பிஜந்தர் எச்சரித்துள்ளார்.

    ஆனால் தன்னிடம் யாரும் அத்துமீறவில்லை என்று பெண் மந்திரி சந்தனா அறிவித்துள்ளார். என்றாலும் திரிபுராவில் சந்தனாவின் இடுப்பை பிடித்தப்படி மந்திரி நிற்கும் காட்சிகள் பரபரப்பை நீடிக்க செய்துள்ளன. #TripuraMinister #ManojKanti
    உத்தரகாண்டில் வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என பாரதிய ஜனதா மந்திரி தெரிவித்துள்ளார். #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    டேராடூன்:

    தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்டுவதில் மத்திய பா.ஜனதா அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    இந்த நிலையில் பா.ஜனதா ஆளும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வீடுகளில் கழிவறை இல்லாவிட்டால் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட இயலாது என்று அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மாநில பஞ்சாயத்து ராஜ் மந்திரி அரவிந்த் பாண்டே கூறியதாவது:-

    பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுபவர்களின் வீடுகளில் கழிப்பறை இருப்பது கட்டாயம். வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாதவர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இயலாது என்று பரிந்துரைத்துள்ளோம்.

    மேலும் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்க கூடாது என்பது பற்றிய பரிசீலனையும் இருக்கிறது. அதோடு பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியும் நிர்ணயிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படுகிறது. #Uttarakhand #Panchayatpolls #BJPMinister
    உத்தரபிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது என்று பா.ஜ.க. மந்திரி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
    லக்னோ:

    உத்தரபிரதேச சட்டசபை தேர்தலின்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று பாரதிய ஜனதா வாக்குறுதி அளித்தது.

    அங்கு பாரதிய ஜனதா ஆட்சி அமைந்தது. ஆனாலும் இதுவரை ராமர் கோவில் கட்டுவதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

    உத்தரபிரதேசத்தில் கூட்டுறவு துறை கேபினட் மந்திரியாக இருப்பவர் முகுத் பிகாரி வர்மா. இவர் பக்ரைச் நகரில் நடந்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அவரிடம் நிருபர்கள் உத்தரபிரதேசத்தில் ஆட்சியை பிடித்தால் ராமர் கோவில் கட்டுவோம் என்று வாக்குறுதி அளித்தீர்கள். இன்னும் கோவில் கட்டவில்லையே என்று கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த முகுத் பிகாரி வர்மா, ராமர் கோவில் நிச்சயம் கட்டப்படும். அதற்கான முயற்சிகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

    இதற்கு நிருபர்கள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ராமர் கோவில் எப்படி கட்ட முடியும் என்று திருப்பி கேட்டனர்.

    அதற்கு பதில் அளித்த மந்திரி, வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இருந்தால் அதற்கு என்ன? சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் தான் இருக்கிறது. நீதி எங்கள் கையில் இருக்கிறது. அதன் நிர்வாகம் எங்கள் கையில் இருக்கிறது. சட்டசபையும் எங்களிடம் உள்ளது. இந்த நாடே எங்களிடம் தான் இருக்கிறது. இது எங்கள் கோவில். எனவே நாங்கள் ராமர் கோவில் கட்டுவோம் என்று பதில் அளித்தார்.

    சுப்ரீம் கோர்ட்டே எங்கள் கையில் இருக்கிறது என்று அவர் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி மந்திரி முகுத் பிகாரி வர்மா கருத்தை அறிய விரும்பியபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். #UttarPradesh #RamaTemple #MukutBihariVerma
    ×